search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்"

    பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நீலகிரி கிளை சார்பில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு அறிவித்த தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும், தீபாவளிக்கான கருணை தொகையை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை அரசு நிறைவேற்றக்கோரி ஊட்டி ராஜீவ்காந்தி ரவுண்டானா பகுதியில் பவர் ஹவுஸ் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. நீலகிரி கிளை தலைவர் பொன்னு தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், ஊட்டி கோட்ட செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை திடீரென மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட குன்னூர் செயலாளர் ரமேஷ் உள்பட 51 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். போராட்டம் குறித்து நீலகிரி கிளை தலைவர் பொன்னு கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் ஒப்பந்த ஊழியர்கள் 133 பேர் பணிபுரிந்து வருகின்றனர். வாரியத்தில் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் குளிரையும் பொருட்படுத்தாமல் மரம் விழுந்ததில் சேதமான மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை சீரமைத்து வருகிறோம். 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 700 பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
    பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) விழுப்புரம் கிளை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திட்ட தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கரன், இணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சலீம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 187 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான 329 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
    ×